2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இங்கிலாந்தை வென்றது வேல்ஸ்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளில், இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில், வேல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியின் முதலாவது பாதியின் முடிவில் இங்கிலாந்து அணி 16-9 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்ததோடு, இரண்டாம் பாதியின் பெரும்பாலான நேரங்களிலும் அவ்வணியே முன்னிலை வகித்தது. எனினும், தொடர்ந்து போராடிய வேல்ஸ் அணி, இறுதியில் 28-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

தென்னாபிரிக்க அணிக்கும் சமோவா அணிக்குமிடையிலான போட்டியில், தென்னாபிரிக்க அணி 46-6 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவான வெற்றியைப் பெற்றது. ஜப்பான் அணியுடன் தோல்வியுற்று அழுத்தத்துக்குள்ளாகியிருந்த நிலையிலேயே, தென்னாபிரிக்காவுக்கு இந்த மிகப்பெரிய வெற்றி கிடைக்கப்பெற்றுள்ளது.

இத்தாலிக்கும் கனடாவுக்குமிடையிலான போட்டியில், இத்தாலி அணி 23-18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
ஒரு கட்டத்தில் கனடா அணி 15-13 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போதிலும், அதன் பின்னர் தோல்வியைத் தழுவியிருந்தது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .