2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை, பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. தொடரில் இரண்டாவதும் இறுதியுமான போட்டியை வென்றே, அவ்வணி தொடரைக் கைப்பற்றியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக உமர் அக்மல் ஆட்டமிழக்காமல் 38 (28), சொஹைப் மசூத் 26  (25) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், டினாஷே பணியங்கர, லூக் ஜொங்வே இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

137 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 15 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் சியன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காமல் 40 (36), சீகன்டர் ராஸா 36 (36) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், மொஹமட் இர்பான், இம்ரான் கான் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக உமர் அக்மல் தெரிவானார்.

இத்தொடரின் முதலாவது போட்டியிலும் 136 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான் அணி, அப்போட்டியில் 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

இத்தொடரின் நாயகனாக, பாகிஸ்தானின் இமாட் வசீம் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .