2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொடர் குறித்து எதிர்பார்ப்புடன் பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த அவுஸ்திரேலியாவின் பயணம் பின்தள்ளிப் போடப்பட்டுள்ளதோடு, அப்பயணம் தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அத்தொடரை நடாத்துவதற்கான எதிர்பார்ப்புடன் காணப்படுவதாக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடருக்காகப் பயணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படுமென, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

பாதுகாப்புத் தொடர்பாக ஆராய்வதற்காக அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் பங்களாதேஷை வந்தடைந்துள்ள நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவரை அவர்கள் சந்தித்துள்ளனர்.

'கிரிக்கெட் விளையாடுவதற்கான அதிகபட்ச பாதுகாப்பான இடங்களில் பங்களாதேஷ் ஒன்று என நான் அவர்களிடம் தெரிவித்தேன். ஆனால், நான் பாதுகாப்பு அல்லது புலனாய்வு முகவராண்மைகளைச் சேர்ந்தவனல்லன. எனவே, 'உங்களுக்குத் தெளிவான நிலைமையை அறிய வேண்டுமானால், புலனாய்வுப் பிரிவினருடன் கலந்துரையாடுங்கள்" என நான் தெரிவித்தேன்" என, கிரிக்கெட் சபைத் தலைவர் நஸ்முல் ஹஸன் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .