2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நியூசிலாந்தை வென்றது இந்தியா

Editorial   / 2017 மே 29 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளின் ஓர் அங்கமாக, இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இலண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 48.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஒரு கட்டத்தில், ஒரு விக்கெட்டை இழந்து 63 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, அதன் பின்னர் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்கள் என்ற நிலைக்குச் சென்றது. எனினும் ஜேம்ஸ் நீஷம், இறுதியில் சிறிது போராடியிருந்தார்.

துடுப்பாட்டத்தில் லூக் ரொங்கி 66 (63), ஜேம்ஸ் நீஷம் ஆட்டமிழக்காமல் 46 (47) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், மொஹமட் ஷமி இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் இரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

190 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 26 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து, 129 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, மழை காரணமாகப் போட்டி இடைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து போட்டியை ஆரம்பிக்க முடியாமல் போக, டக் வேர்த் லூயிஸ் முறையில், போட்டியின் முடிவு கணிக்கப்பட்டது. இதன்போது, டக் வேர்த் லூயிஸ் முறையில் பெற்றிருக்க வேண்டிய 85 ஓட்டங்களை விட இந்திய அணி, 45 ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றிருந்தது.

துடுப்பாட்டத்தில் விராத் கோலி ஆட்டமிழக்காமல் 52 (55), ஷீகர் தவான் 40 ஓட்டங்களைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X