2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மரேக்கு 3ஆவது கிரான்ட் ஸ்லாம்

Gopikrishna Kanagalingam   / 2016 ஜூலை 10 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் சம்பியனாக, பிரித்தானியாவின் அன்டி மரே தெரிவாகியுள்ளார். கனடாவின் மிலோஸ் றாவோனிஸை எதிர்கொண்ட மரே, நேர் செட்டில் வெற்றியைப் பெற்றுக் கொண்டார்.

நம்பிக்கையுடன் களமிறங்கிய அன்டி மரே, 6ஆம் நிலை வீரரான மிலோஸ் றாவோனிஸைச் சிறப்பாக எதிர்கொண்டார். முதலாவது செட்டை 6-4 என்ற கணக்கிலும் அடுத்த இரண்டு செட்களையும் 7-6, 7-6 என்ற புள்ளிகள் கணக்கிலும் கைப்பற்றிய மரே, இவ்வாண்டின் சம்பியனாகத் தெரிவானார்.

இது, விம்பிள்டன் போட்டிகளில் அவரது இரண்டாவது சம்பியன் பட்டமென்பதோடு, மூன்றாவது கிரான்ட் ஸ்லாம் பட்டமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .