2024 மார்ச் 28, வியாழக்கிழமை

1000 ஆவது பகல்- இரவு கிரிக்கெட் போட்டி மழையினால் பாதிப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தம்புள்ளையில் இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் நாணயச் சுழற்சியில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்றது. எனினும் துடுப்பாட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. இன்று போட்டி ஆரம்பிக்கப்படாவிட்டால் நாளை மீண்டும் நாணயச் சுழற்சி மேற்கொள்ளப்பட்டு ஆட்டம் நடத்தப்படும்.

இப்போட்டி 1000 ஆவது பகல் - இரவு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது பகல்- இரவு ஒருநாள் சர்வதேச போட்டி 1979 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0

  • Ramesh Friday, 20 August 2010 12:03 AM

    அட, இது ஆயிரமாவது பகல் இரவு கிரிக்கெட் போட்டியா?

    Reply : 0       0

    Jeya Friday, 20 August 2010 12:10 AM

    தம்புள்ளை உலர் வலயத்தில் இருப்பதால் மழையினால் போட்டிகள் பாதிப்படைவதைத் தவிர்க்கலாம் எனக் கூறப்பட்டது. இப்போது அங்கும் மழையினால் பாதிப்பா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X