2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உலக 20-20 தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டி இன்று

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக 20-20 தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டி இன்று இந்தியா, தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையில் பங்களாதேஷில் நடைபெறவுள்ளது. இரு இரு அணிகளும் 4 உலக 20-20 போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில் மூன்றில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒன்றில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. 20-20 போட்டிகளில் இரு அணிகளும் 7 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 5 இல் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 2 இல் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு அணிகளும் இரண்டாவது தடவை உலக 20-20 தொடரின் அரை இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன. முதல் உலக 20-20 இல் இந்திய அணியும், 2009 ஆண்டு உலக 20 -20 தொடரில் தென் ஆபிரிக்க அணியும் அரை இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தன.  

வெற்றி பெறும் அணி இலங்கை அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை, இந்திய அணிகள் ஒவ்வொரு தடவை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன. தென் ஆபிரிக்க அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டி மழை காரணமாக நடைபெறாது போனால், புள்ளிகளின் அடிப்படையில் முதலில் இருக்கும் இந்திய அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .