2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உலக 20-20 அரை இறுதியில் இந்தியா

A.P.Mathan   / 2014 மார்ச் 29 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக 20-20 தொடரின் இரண்டாம் சுற்றில் பங்களாதேஷ் அணியை வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று குழு 02 இல் 6 புள்ளிகளைப் பெற்று இந்திய அணி அரை போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இதேவேளை இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்துள்ள பங்களாதேஷ் அணிக்கு அரை இறுதி வாய்ப்புகள் வெகுவாக குறைவடைந்துள்ளன.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அனாமல் ஹக் 44(43 பந்துகள்) ஓட்டங்களையும், மஹமதுல்லா 33 (23 பந்துகள்) ஓட்டங்களையும், முஸ்பிகீர் ரஹீம் 24(21 பந்துகள்)  ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அமித் மிஷ்ரா 3 விக்கெட்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது. இதில் விராத் கோலி ஆட்டமிழக்காமல் 57(50 பந்துகள்) ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா 56(44 பந்துகள்) ஓட்டங்களையும், டோனி ஆட்டமிழக்காமல்  22(12 பந்துகள்) ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் நாயகனாக அஷ்வின் தெரிவு செய்யபட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .