2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பட்டிபளை ஜனாதிபதி கிண்ண கரப்பந்தாட்டம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜௌபர்கான்)

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 40ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் ஜனாதிபதி தங்க கிண்ணத்திற்கான கரப்பந்தாட்ட போட்டியில் பட்டிபளை பிரிவில் ஆண்கள் பிரிவிலும் பெண்கள் பிரிவிலும் அம்பலாந்துறை கதிரவன் விளையாட்டு கழகம் முதலிடங்களைப் பெற்றுள்ளதாக பட்டிபளை பிரதேதச விளையாட்டு அதிகாரி கே.டிலக்சன் தெரிவித்தார்.

இரண்டாமிடத்தை ஆண்கள் பிரிவில் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டு கழகமும் ,பெண்’கள் பிரிவிவில் கடுக்காமுனை வாணி வித்தியாலயமும் தட்டிக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று அம்பிலாந்துறை கலைமகள் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .