2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முதல்நாள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆதிக்கம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 13 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், பங்களாதேஷ் அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பித்தது. இன்றைய முதல்நாள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சிறப்பான நிலையில் காணப்படுகிறது.

மிர்புர் ஷேரே பங்களா தேசிய மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்றைய நாள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 361 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, அதன் பின்னர் 4ஆவது விக்கெட்டுக்காக 125 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ஷிவ்நரின் சந்தர்போல் ஆட்டமிழக்காமல் 123 ஓட்டங்களையும், கெரான் பவல் 117 ஓட்டங்களையும், டினேஷ் ராம்டின் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக அறிமுக வீரரான சொஹக் கஷி 3 விக்கெட்டுக்களையும், ஷகாதத் ஹொசைன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .