2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முதல் நாள் முடிவில் இந்திய அணி சிறப்பான ஆட்டம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 15 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்குமிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பித்தது. இன்றைய முதல்நாள் முடிவில் இந்திய அணி சிறப்பான நிலையில் காணப்படுகிறது.

அஹமதாபாதில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இன்றைய நாள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 323 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதலாவது விக்கெட்டுக்காக 134 ஓட்டங்களைப் பகிர்ந்த இந்திய அணி, ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டை இழந்து 224 ஓட்டங்களுடன் காணப்பட்டது. ஆனால், இரண்டாவது விக்கெட்டாக விரேந்தர் செவாக் வீழ்த்தப்பட்டதும் சற்று மெதுவாக ஆடிய போதிலும், முதல் நாள் முடிவில் சிறப்பான நிலையில் காணப்படுகிறது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக விரேந்தர் செவாக் 117 பந்துகளில் 117 ஓட்டங்களைக் குவித்த அதேவேளை, செற்றேஸ்வர் புஜாரா ஆட்டமிழக்காமல் 98 ஓட்டங்களுடனும் ஆடி வருகிறார். ஏனையோரில் கௌதம் கம்பீர் 45 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை, யுவ்ராஜ் சிங் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக வீழ்த்தப்பட்ட 4 விக்கெட்டுக்களையும் கிரேம் ஸ்வான் வீழ்த்தியிருந்தார்.

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விதித்த கட்டுப்பாடுகளை அடுத்து இந்தத் தொடரில் புகைப்படக் கலைஞர்கள் இந்தத் தொடரைப் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதுடன், வெளிநாட்டு செய்தி முகவர்களும் இந்தத் தொடரைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .