2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷ் அணி சிறப்பான பதிலடி

A.P.Mathan   / 2012 நவம்பர் 15 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், பங்களாதேஷ் அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் 3ஆம் நாள் முடிவில் பங்களாதேஷ் அணி சிறப்பான பதிலடியை வழங்கியுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 527 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில் தனது ஆட்டத்தை இடைநிறுத்தி பங்களாதேஷ் அணிக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ஷிவ்நரின் சந்தர்போல் ஆட்டமிழக்காது 203 ஓட்டங்களையும், டினேஷ் ராம்டின் ஆட்டமிழக்காது 126 ஓட்டங்களையும், கெரான் பவல் 117 ஓட்டங்களையும் பெற்றதோடு சொஹக் கஷி 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

இந்நிலையில் பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி நேற்றைய நாள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் தொடர்ந்து சிறப்பாக ஆடிய பங்களாதேஷ் அணி இன்றைய நாள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 455 ஓட்டங்களைப் பெற்றனர். 4ஆவது விக்கெட்டுக்காக நயீம் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன் இருவரும் 167 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷ் அணிக்கு சிறப்பான நிலையை ஏற்படுத்தினர்.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக நயீம் இஸ்லாம் 108 ஓட்டங்களையும், ஷகிப் அல் ஹசன் 89 ஓட்டங்களையும், தமிம் இக்பால் 72 ஓட்டங்களையும், முஷ்பிக்கூர் ரஹீம் 43 ஓட்டங்களையும், மஹமதுல்லா ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும், நசீர் ஹொசைன் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும், ஷகாரியார் நபீஸ் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சர்பாக ரவி ராம்போல் 3 விக்கெட்டுக்களையும், டெரன் சமி 2 விக்கெட்டுக்களையும், வீரசம்மி பேர்மாள் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியில் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுக்களைக் கைவசம் கொண்டுள்ளதுடன் மேற்கிந்தியத் தீவுகளின் முதல் இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையைக் கடக்க 72 ஓட்டங்களை மேலதிகமாகப் பெற வேண்டியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .