2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்திய, சிம்பாப்வே தொடரின் முதலாவது போட்டி இன்று

Super User   / 2013 ஜூலை 24 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேயிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பிக்கவுள்ளது.

ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ள இன்றைய போட்டி இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது.

இந்திய அணியின் சிரேஷ்ட வீரர்கள் பலருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், விராத் கோலி தலைமையிலான இளம் அணியொன்று சிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்திய அணியின் சிரேஷ்ட வீரர்களான மகேந்திரசிங் டோணி,  ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் சர்மா ஆகியோரோடு அண்மைக் காலத்தில் அதிகமான போட்டிகளில் பங்குபற்றி வந்த உமேஷ் யாதவ்,  புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

சிம்பாப்வேயைப் பொறுத்தவரை இந்த தொடர் அவர்களுக்கு முக்கியமானது என்பதால், அவ்வணி கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதன் காரணமாக, இளைய அணியான இந்திய அணிக்கு அவ்வணி சிறப்பான போட்டியை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:

சிம்பாப்வே:

வியூசி சிபன்டா, ஷிகன்டர் ராஸா, ஹமில்ற்றன் மஸகட்ஸா,  பிரென்டன் ரெய்லர், மல்கொம் வோலர், சியன் வில்லியம்ஸ்,  எல்ற்றன் சிக்கும்புரா, புரொஸ்பர் உற்செயா, ரீனோரென்டா முற்றோம்பொட்ஸி, கைல் ஜார்விஸ், பிரையன் விற்றோரி

இந்தியா:

ஷீகர் தவான், றோகித் சர்மா, செற்றேஸ்வர் புஜாரா, விராத் கோலி,  சுரேஷ் ரெய்னா, டினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, பர்வேஸ் ரசூல்,  அமித் மிஷ்ரா, வினய் குமார், ஜெய்தேவ் உனத்கட்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .