2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 03 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் நடைபெற்று வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டி மழைக்காரணமாக இடைநிறுத்தப்பட்டதையடுத்தே டக்வத் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 27 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 160 ஓட்டங்களை பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு 161 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய நிலையில் 13.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை பெற்றிருந்தது போது ஆலங்கட்டி மழை பெய்தமையினால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .