2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சம்பியனாகியது அவுஸ்திரேலியா

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 01 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 112 ஓட்டங்களால் எளிதில் வெற்றிகொண்டு அவுஸ்திரேலியா அணி சாம்பியன் கிண்ணத்தை சுபீகரித்துக்கொண்டது. 

பேர்த்தில் நடைபெற்ற குறித்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் அவுஸ்திரேலிய அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 278 ஓட்டங்களை குவித்தது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சார்பில் கிளன் மக்ஸ்வெல் 95 ஓட்டங்களையும், மிச்சல் மார்ஸ் 60 ஓட்டங்களையும், ஜேம்ஸ் பவுல்க்னர் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் ஸ்ருவார்ட் புரோட் 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் அன்டர்ஸன் 2 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 39.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 122 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்ச ஓட்டமாக 33ஐ ரவி போபரா பெற்றுக்கொண்டார்.

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் சார்பில் கிளன் மக்ஸ்வெல் 4 விக்கெட்டுகளையும் மிச்சர் ஜோன்ஸன் 3 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹெஸ்லிவூட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

குறித்த போட்டியின் நாயகனாக அவுஸ்திரேலிய அணியின் கிளன் மக்ஸ்வெல்லும் தொடரின் நாயகனாக அவுஸ்திரேலிய அணியின் மிச்சல் ஸ்டார்க்கும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்தத் தொடரில் மற்றொரு அணியான இந்தியா, மிக மோசமான தோல்விகளுடன் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X