Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 26 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில், இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எவ்வாறாயினும் அரசியலிலிருந்து ஓய்வுபெறப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களுடன், கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் தற்போது நடைபெற்றுவரும் சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய ஜனாதிபதி கூறியதாவது,
“நான் அரசியலுக்கு வந்ததோ நாடாளுமன்ற உறுப்பினரானதோ, அமைச்சரானதோ அல்லது ஜனாதிபதியானதோ, நான் நினைத்த மாத்திரத்தில் நடந்ததில்லை. தானாகவே எல்லாம் நடந்தேறியது.
“ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவராகவோ அல்லது பிரதமராகவோ பதவி வகிக்க வேண்டும். ஆனால், நான் அவ்வாறான பதவி எதையும் வகிக்காத நிலையிலேயே, ஜனாதிபதியாகத் தெரிவானேன். இது, நான் எதிர்ப்பார்த்து நடந்ததில்லை. அன்றைய சூழ்நிலையில், நாடு இருந்த நிலையில் நடந்தேறிய விடயமாகும்.
“அதேபோல், அடுத்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேனோ மாட்டேனோ என்று எனக்குத் தெரியாது. நான் இன்னமும் அது குறித்துத் தீர்மானிக்கவில்லை. ஆனால், அரசியலில் தொடர்ந்து இருப்பேன் என்பதை, என்னால் உறுதியாகக் கூற முடியும்” என, ஜனாதிபதி மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
4 hours ago
7 hours ago