2024 மார்ச் 28, வியாழக்கிழமை

திருத்திய வர்த்தமானி இன்று வரும்

Editorial   / 2017 நவம்பர் 27 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை, இன்று திங்கட்கிழமை வெளியிடுவதற்கு, நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.  

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டபோது, 40 சபைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள அச்சுப்பிழையைச் சரிசெய்து, இந்தத் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.   

“அந்த உள்ளூராட்சி மன்றங்களின் பெயரை குறிப்பிடும் போது அல்லது அதற்குரிய கிராம சேவகர் பிரிவை குறிப்பிடும் போது, சிறிய அச்சுப்பிழை ஏற்பட்டுள்ளது. ஆகையால்தான், அந்த 40 சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு, இடையூறு ஏற்பட்டுள்ளது” என்று அவ்வமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.   

திருத்தப்பட்ட வர்த்தமானி வெளியானதன் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, அந்த 40 சபைகளுக்கும் தேர்தலை நடத்தமுடியுமென அவர் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழு, 93 சபைகளுக்கான தேர்தலையே நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

அதில், அச்சுப்பிழை ஏற்பட்டுள்ள 40 சபைகள் உள்ளடங்கவில்லை. இந்நிலையில், திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியானதும், 40 சபைகளையும் சேர்த்து, 133 சபைகளுக்கும் தேர்தலை நடத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X