2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரதமர் - வடக்கு ஆளுநர் கொழும்பில் சந்திப்பு

Editorial   / 2020 ஜூன் 29 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும்   வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்ஸ்  ஆகியோருக்கிடையில்  சந்திப்பு இன்று (29) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகளின் பின்னர் வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கையினை  வழமைக்கு கொண்டுவருதல் தொடர்பில் இதன்போது, பேசப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து  கடல் மார்க்கமாக  நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களை   தடுத்து நிறுத்துவது தொடர்பிலும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், வடக்கில்  மக்களின் தேவைகளை  பூர்த்தி செய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய  எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X