2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘பிளவு இல்லை’

Editorial   / 2018 ஜூன் 04 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் எவ்விதமான வேறுபாடுகளும் இன்றி, புதிய அதிகாரிகள் தெரிவு இடம்பெற்றது என்று தெரிவித்த கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் 45 நாட்களுக்குள் நிறைவடையும் எனவும் கட்சிக்குள் எவ்விதமான பிளவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைள் நிறைவடையும் ​வரையிலும் புதிய அதிகாரிகளை கொண்ட சபை, நேற்று (03) நிறுவப்பட்டது. அதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் அகில இலங்கை செயற்குழு ஆகியன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், பத்தரமுல்லையில் உள்ள அபேகம வளாகத்தில் கூடியது. 

“கட்சியில் மறு​சீரமைப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தற்காலிக அதிகாரிகள் சபை நியமிக்கப்பட்டது. இந்த அதிகாரிகள் சபையின் தற்காலிக காலம் 45 நாட்களாகும். ஆகக் கூடினால், இன்னுமொரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்கள் எடுக்கும். அதற்குள் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நிறைவடையச் செய்வோம்” என்றார்.  

கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சகலரும் இணைந்து, ஏகமனதாகவே இதனை மேற்கொண்டோம். இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை, எவ்விதமான பேதங்களும் இன்றி முன்னெடுக்கப்பட்டது என்று தெரிவித்த அவர், எஸ்.பீ.திஸாநாயக்க உள்ளிட்டோர், இந்தச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கினர் என்றார்.  

கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளராக பேராசியர் ரோஹன லக்ஷமன் பியதாச தெரிவுசெய்யப்பட்டார். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன ஆகியோர் கட்சியின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.  

கட்சியின் தேசிய அமைப்பாளராக அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவும் பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  

கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப- தலைவர்களாக ஏ.எச்.எம்.பௌசி, சரத் அமுனுகம, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, ரெஜினோல்ட் குரே, பியசேன கமகே, விஜித் விஜயமுனித டி சொயிஸா, மஹிந்த சமரசிங்ஹ, திலான் பெரேரா, தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

புதிய உப செயலாளர்களாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தஸநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் பிரதியமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, சுமேதா ஜீ. ஜயசேன ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மத்திய செயற்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.  

அத்துடன், மத்தியக் குழுவுக்கு தெரிவு செய்யப்படும் ஏனைய நியமனங்கள் கட்சியின் தலைவரினால் மேற்கொள்ளப்படவுள்ளன என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்தக்கப்பட்டுள்ளது,  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புக்கு ஏற்ப நியமிக்கப்பட வேண்டியுள்ள அமைப்பாளர்கள், தொழில் வல்லுனர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு அமைப்புகளை எதிர்காலத்தில் நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X