2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இளைஞர்களுடன் விளையாடிய சஜித்

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ இளைஞர்களுடன் இணைந்து கிரிக்கெட், உதைபந்து விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தார்.

யாவருக்கும் வீடு என்ற செமட்ட செவன திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் - கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊரெழுப் பகுதியில், அமைக்கப்பட்ட புதிய மாதிரிக் கிராமத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.


இந்நிகழ்வின் போது அவ்விடத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் இணைந்து தானும் மென்பந்து கிரிக்கெட் மற்றும் கால்ப்பந்து விளையாட்டுகளை விளையாடியிருந்தார்.

அத்தோடு இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் சிலவற்றை வழங்கியதுடன், மேலும் தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்குவதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .