2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’சூழலை பாதுகாப்போம்’

Editorial   / 2018 ஜூலை 07 , பி.ப. 12:13 - 1     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

சூழல் சீர்கேடுகளைத் தடுக்கும் முகமாக “எமது சூழலை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில்,  தலவாக்கலை பெயார்வெல் தோட்டத்தின் ஏற்பாட்டில், இன்று (07), லிந்துலையில் விழிப்புணர்வு பேரணியொன்று இடம்பெற்றது.

இப்பேரணியானது, பெயார்வெல் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியினூடாக, லிந்துலை நகரம் வரை சென்றடைந்தது.  இப்பேரணியின் போது, சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் சூழலுக்கு பாதுகாப்பான விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஏந்தியவாறு, கோஷங்கள் எழுப்பப்பட்டது.

சுமார் 100க்கும் அதிகமான பிரதேச மாமணவர்கள் இதில் கலந்துகொண்டிருந்ததோடு, லிந்துலை பொலிஸாரும் பெயார்வெல் தோட்டத்தின் முகாமையாளர், வைத்தியர், சேவையாளர்கள் என பலரும் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 1

  • M.Kurusarma Tuesday, 05 February 2019 02:20 PM

    சுழலை பாதுகாப்போம் சுகமாகவா ழ்வோம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X