2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சைட்டத்துக்கு எதிரான வாகன பேரணி ஆரம்பம்

Kogilavani   / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

சைட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கினிகத்தேனை அம்பகமுவையில் இருந்து பதுளை வரையிலான வாகன பேரணி, இன்று  காலை கினிகத்தேனையில் ஆரம்பமாகியது.

மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாணசபை உறுப்பினர் சமந்த விஜேரத்ன மற்றும் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் மஞ்சுல சுரவீர ஆகியோர் தலைமையிலேயே, இந்த பேரணி ஆரம்பமாகியது.

வாகன பேரணியானது, கினிகத்தேனை, ஹட்டன், கொட்டகலை தலவாக்கலை, நுவரெலியா, வெலிமடை வழியாக, பதுளையை சென்றடைய உள்ளதுடன், பேரணியின் போது சைட்டம் தொடர்பிலான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

வாகன பேரணியில், அரச வைத்தியசாலை மற்றும் கிராமிய வைத்தியசாலையின் வைத்தியர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .