2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொடிச்சீலைக்கான காளாஞ்சி...

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். நல்லூர் கந்தனின் வருடாந்த திருவிழா எதிர்வரும் வாரம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் அதனை முன்னிட்டு பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு முறைகள் நல்லூர் ஆலயத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்கமைவாக, இன்று வியாழக்கிழமை கொடிச்சீலைக்கான காளாஞ்சி எடுத்துச் செல்லல் நிகழ்வு நடைபெற்றது.

நல்லூரின் புராதான கலாசார விழுமியங்களில் ஒன்றான இம்முறையானது நல்லூர் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக நடைபெறுவது வழமையாகும்.

அதாவது, வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்பு பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் (ஒற்றைதிருக்கை வண்டில்) மூலம் எடுத்துச்செல்லப்படும்.

ஆரம்ப காலத்தில் கொடிசீலைக்கான காளாஞ்சியானது குதிரை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. எனினும் கடந்த நூறு வருடங்களிற்கு மேலாக இந்த நடைமுறை மாற்றப்பட்டிருந்தது.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழலை தொடர்ந்து இப்பாரம்பரியம் மறக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வருடம் முருகபெருமானின் திருவருள் கைகூடியதற்கமைவாக மாட்டு வண்டியில் கொடிச்சீலைக்கான காளாஞ்சி எடுத்துச்செல்லப்பட்டு ஆலய பிரதம குருவினால் உரியவர்களுக்கு வழங்கப்பட்டது. 







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X