2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்டர் மிலன், றோமா வென்றன

Editorial   / 2018 பெப்ரவரி 12 , பி.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இன்டர் மிலன், றோமா ஆகிய அணிகள் வென்றுள்ளன.

இன்டர் மிலன், 2-1 என்ற கோல் கணக்கில் பொலொக்னாவை வென்றது. இன்டர் மிலன் சார்பாக, ஈடர், யன் கரமொஹ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பொலொக்னா சார்பாகப் பெறப்பட்ட கோலை றொட்றிகோ பலசியோ பெற்றார்.

றோமா, 5-2 என்ற கோல் கணக்கில் பெனெவென்டோவை வென்றது. றோமா சார்பாக, சென்கிஸ் அன்டர் 2 கோல்களையும் பெடெரிக்கோ பஸியோ, எடின் டெஸ்கோ, கிறேகொய்ரே டெப்ரல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பெனெவென்டோ சார்பாக, குய்ல்ஹெர்மே கொஸ்டா மார்க்கஸ், என்றிக்கோ பிறிக்நொலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .