2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கராச்சியில் விளையாடுகிறது மேற்கிந்தியத் தீவுகள்

Editorial   / 2018 மார்ச் 12 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கு அடுத்த மாத ஆரம்பத்தில், மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்காக மேற்கிந்தியத் தீவுகள் வரவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜாம் சேதி தெரிவித்துள்ளார்.

குறித்த தொடரின் மூன்று போட்டிகளும் கராச்சியிலேயே இடம்பெறவுள்ளது. அந்தவகையில், இலங்கையணி பஸ் மீது 2009ஆம் ஆண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னர் கராச்சியில் இடம்பெறப்போகும் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளாக குறித்த போட்டிகள் அமையவுள்ளன.

குறித்த தாக்குதல்களுக்கு பின்னர் சிம்பாப்வே, உலகப் பதினொருவர் அணி, இலங்கை ஆகியவனவே பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளதுடன், நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் லாகூரிலேயே இடம்பெற்றிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .