2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

குழாமிலிருந்து விடுவிக்கப்பட்டார் இம்ரான் தாஹீர்

Editorial   / 2018 ஒக்டோபர் 12 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமிலிருந்து சிரேஷ்ட சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய தாஹீர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த நிலையில், குழாமிலுள்ள மற்றைய சுழற்பந்துவீச்சாளரான தப்ரைஸ் ஷம்சியை மேலும் சோதிக்கும் பொருட்டே தாஹீர் குழாமிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிகின்றது.

இத்தொடரின் இரண்டாவது போட்டி, பொச்சர்ஸ்போர்மில் இலங்கை நேரப்படி இன்றிரவு 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .