2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டென்னிஸ் போட்டிகளில் நிர்ணயம்?

Editorial   / 2018 ஜூன் 05 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

டென்னிஸில் போட்டிகளை நிர்ணயம் செய்வது தொடர்பான விசாரணைகளில் 13 பேரை பெல்ஜியப் பொலிஸார் தடுத்து வைத்துள்ளதாக அரச வழக்குத் தொடருநர்கள் தெரிவித்துள்ளனர். டென்னிஸின் அடி மட்டங்களில் மோசடி இடம்பெறலாம் என சுயாதீனமான அறிக்கையொன்று எச்சரித்த ஒரு மாதத்துக்குள்ளேயே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

பெல்ஜியத்தில் 21 முகவரிகளுக்கு அதிகாரிகள் சென்ற அதேநேரம் ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, பல்கேரியா, ஸ்லோவாக்கியா, நெதர்லாந்து ஆகிய இடங்களிலும் ஆர்மேனிய-பெல்ஜிய குற்ற வலைப்பின்னலொன்று போட்டிகளை நிர்ணயம் செய்வதற்கு வீரர்களுக்கு கையூட்டு வழங்கியதென்ற சர்வதேச விசாரணையின் அடிப்படையில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .