2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாளை 5ஆவது போட்டி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 15 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 5ஆவதும் இறுதியுமான போட்டி, சென்னையில் நாளை  ஆரம்பிக்கவுள்ளது.

ஏற்கெனவே தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்தியா, தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றும் நோக்கிலும், ஆறுதல் வெற்றியொன்றைப் பெறும் நோக்கில் இங்கிலாந்தும், இப்போட்டியில் களமிறங்குகின்றன.
புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில், அவசர அவசரமாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டே, இப்போட்டி இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டியில், இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது கணுக்கால், தோட்பட்டை, பொதுவான களைப்பு ஆகியன காரணமாகவே அவர் இன்று ஆரம்பிக்கும் போட்டியில் பங்குபெற மாட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X