2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போலந்தை வென்றது மெக்ஸிக்கோ

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியொன்றில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில், போலந்தை மெக்ஸிக்கோ வென்றது. இப்போட்டியில் மெக்ஸிக்கோ சார்பாகப் பெறப்பட்ட கோலை றாவுக் ஜிமெனெஸ் பெற்றிருந்தார்.

இப்போட்டியில் ஸ்கேவியர் ஹெர்னான்டஸ், ஜியோவனி டொஸ் சன்டோஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாதபோதும் சோதனை மெக்ஸிக்கோ அணி பந்தை பெரும்பாலான நேரம் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், தமது அரைப் பகுதிக்குள் போலந்து வீரர்களை நுழைவதையும் தடுத்திருந்தனர். இப்போட்டியில் 62 சதவீதமான நேரத்தில் தமது கட்டுப்பாட்டிலேயே மெக்ஸிக்கோ வைத்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .