2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முதலாவது சுற்றுடன் வெளியேறினார் ஷரபோவா

Editorial   / 2018 பெப்ரவரி 13 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டார் பகிரங்க டென்னிஸ் தொடரின் முதலாவது சுற்றுடனேயே உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா வெளியேறியுள்ளார்.

30 வயதான மரியா ஷரபோவா, இரண்டு மணித்தியாலங்கள் 38 நிமிடங்கள் வரை சென்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில், 6-4, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் றோமானியாவின் மோனிக்கா நிக்குலெஸ்குடன் தோற்றே தொடரிலிருந்து வெளியேறினார்.

இப்போட்டியில் தொடர்ச்சியான பெறுபேற்றை வெளிப்படுத்தத் தவறியிருந்த மரியா ஷரபோவா, இப்போட்டி முழுவதும் 52 கட்டாயமற்ற தவறுகளை புரிந்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .