2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ரொனால்டோ மீது பாலியல் தாக்குதல் குற்றஞ்சாட்டிய பெண்ணின் கோரிக்கையில் வழக்கு

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன்னை 2009ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாக்கினார் என சிவில் வழக்குத் தொடர்ந்துள்ள பெண்ணின் கோரிக்கையில் ஐக்கிய அமெரிக்காவின் லாஸ் வேகாஸிலுல்ள பொலிஸார் குற்றவியல் விசாரணையொன்றை மீளத் திறந்துள்ளனர்.

தனது கட்சிகாரர் கத்ரின் மயோர்காவை லாஸ் வேகாஸ் ஹொட்டல் அறையொன்றில் 2009ஆம் ஆண்டு ஜுன் 13ஆம் திகதி ரொனால்டோ தாக்குதலுக்குள்ளாக்கியதாகக் கூறி முறைப்பாடொன்றை வழக்கறிஞர் லெஸ்லி மார்க் ஸ்டோவால் கிளார்க் கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடொன்றை கடந்த வாரம் மேற்கொண்டிருந்தார்.

குறித்த முறைப்பாட்டில், சம்பவம் இடம்பெற்ற நாளிலிருந்தான குற்றவியல் வழக்கொன்றை மீளத் திறக்குமாறு பொலொஸாரை மயோர்கா வினவியதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, ரொனால்டோவின் பெயரைக் குறிப்பிடாத லாஸ் வேகாஸ் பொலிஸார், முறைப்பாட்டில் பெயரிடப்பட்ட பெண்ணால் கொண்டுவரப்பட்ட வழக்கை மீளத் திறந்துள்ளதாக நேற்று முன்தினம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறெனினும், மருத்துவப் பரிசோதனை இடம்பெற்றபோதும் சம்பவம் இடம்பெற்ற இடத்தையோ அல்லது சந்தேக விளக்கத்தையோ தடயவியல் நிபுணர்களுக்கு அந்நேரம் மயோர்கா வழங்கியிருக்கவில்லை என பொலிஸார் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், 2018ஆம் ஆண்டு செப்டெம்பரைப் பொறுத்த வரை வழக்கு மீளத் திறக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவரால் வழங்கப்பட்ட தகவல்களை தங்களது நிபுணர்கள் தொடர்வதாகத் தெரிவித்துள்ள பொலிஸாரின் அறிக்கையொன்று, இது நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசாரணையென்றும் மேலதிக தகவல்கள் தற்போது வெளியிடப்படாது என்று கூறியுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவத்தை கடந்த வாரயிறுதியில் மறுத்திருந்த போர்த்துக்கல்லினதும் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸினதும் முன்கள வீரரான ரொனால்டோ, போலிச் செய்தி என வர்ணித்திருந்தார்.

குறித்த விடயத்தை வெளிப்படுத்தாமைக்காக நீதிமன்றத்துக்கு வெளியே 375,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பெறும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமையை தனது முறைப்பாட்டில் மயோர்கா குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .