2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஸ்பெய்ன், இத்தாலி, சுவிற்ஸர்லாந்து வென்றன

Editorial   / 2019 மார்ச் 25 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளில், ஸ்பெய்ன், இத்தாலி, சுவிற்ஸர்லாந்து, சுவீடன், அயர்லாந்துக் குடியரசு உள்ளிட்ட அணிகள் வென்றுள்ளன.

தமது நாட்டில் நேற்று அதிகாலை இடம்பெற்ற நோர்வேயுடனான போட்டியில் ஸ்பெய்ன் வென்றிருந்தது. இப்போட்டியின் 16ஆவது நிமிடத்தில், சக பின்கள வீரரான ஜோர்டி அல்பாவிடமிருந்து பெற்ற பந்தை ஸ்பெய்னின் முன்கள வீரர் ஜோர்டி அல்பா கோலாக்க அவ்வணி முன்னிலை பெற்றது.

இந்நிலையில், நோர்வேயின் முன்கள வீரர் பியொன் ஜோன்சனை, ஸ்பெய்னின் பின்களவீரர் இனிகோ மார்ட்டின் வீழ்த்தியதைத் தொடர்ந்து, போட்டியின் 65ஆவது நிமிடத்தில் வழங்கப்பட்ட பெனால்டியை நோர்வேயின் இன்ன்னொரு முன்களவீரரான ஜோஷுவா கிங் கோலாக்க, அவ்வணி கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தியது.

அந்தவகையில், அடுத்த ஆறாவது நிமிடத்தில், நோர்வேயின் கோல் காப்பாளர் ருனே ஜர்செய்னால் ஸ்ப்யெனின் முன்கள வீரர் அல்வரோ மொராட்ட்டா வீழ்த்தப்பட்டநிலையில் வழங்கப்பட்ட பெனால்டியை ஸ்பெய்னின் அணித்தலைவரும், பின்கள வீரருமான சேர்ஜியோ றாமோஸ் கோலாக்கியதோடு இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் வென்றது.

இப்போட்டியில் 75 சதவீதத்துக்கும் அதிகமான நேரம் ஸ்பெய்னே பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், கோல் கம்பத்தை நோக்கி 26 உதைகளைக் கொண்டிருந்தபோதும், பல கோல் பெறும் வாய்ப்புகளை அல்வரோ மொராட்டா தவறவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமது நாட்டில் நேற்று அதிகாலை நடைபெற்ற பின்லாந்துடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றிருந்தது. இத்தாலி சார்பாக, நிகொலோ பரெல்லா, மொய்ஸே கான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, ஜோர்ஜியாவில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் சுவிற்ஸர்லாந்து வென்றிருந்தது. சுவிற்ஸர்லாந்து சார்பாக, ஸ்டீவன் ஸுபர், டெனிஸ் ஸகரியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், தமது நாட்டில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற றோமானியாவுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடன் வென்றிருந்தது. சுவீடன் சார்பாக, றொபின் குவைஸன், விக்டர் கிளாசென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, றோமானியா சார்பாகப் பெறப்பட்ட கோலை கிளெடி கசரு பெற்றிருந்தார்.

இதேவேளை, ஜிப்ரோல்டரில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்துக் குடியரசு வென்றிருந்தது. அயர்லாந்துக் குடியரசு சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜெஃப் ஹென்ட்றிக் பெற்றிருந்தார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .