2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மூன்றாவது போட்டியில் லஹிரு திரிமன்ன சந்தேகம்

A.P.Mathan   / 2013 ஜூலை 24 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது, நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை சார்பாக லஹிரு திரிமன்ன பங்குபற்றுவது சந்தேகத்திற்குரியது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
3ஆவது, 4ஆவது போட்டிகளுக்கான இலங்கைக் கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட குழாமில் லஹிரு திரிமன்ன இடம்பெற்றுள்ள போதிலும், அவர் அப்போட்டியில் பங்குபற்றுவதற்கான உடற்தகுதியை அடைந்தால் மாத்திரமே அப்போட்டியில் பங்குபற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முதலிரண்டு போட்டிகளிலும் சர்வதேசக் கிரிக்கெட் சபையின் போட்டித்தடை காரணமாகப் பங்குபற்றியிருக்காத இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், இக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
அஞ்சலோ மத்தியூஸின் உள்ளடக்கம் தவிர, முதலிரு போட்டிகளுக்குமாக அறிவிக்கப்பட்ட இலங்கைக் குழாமில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.
 
இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி 26ஆம் திகதியும், நான்காவது போட்டி 28ஆம் திகதியும் கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
 
அறிவிக்கப்பட்டுள்ள குழாம்:
அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால், லஹிரு திரிமன்ன, திலகரட்ண டில்ஷான், உபுல் தரங்க, குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன, அஞ்சலோ பெரேரா, ஜெஹான் முபாரக், ரங்கன ஹேரத், சச்சித்திர சேனநாயக்க, அஜந்த மென்டிஸ், லசித் மலிங்க, ஷமின்ட எரங்க, திஸர பெரேரா, சுரங்க லக்மால்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X