2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’செய்தி ஊடகத் தர நிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்டம் ’’ சமர்ப்பிக்கப்படவுள்ளது’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 04 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

செய்தி ஊடகத் தர நிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்டமொன்று மிக விரைவில் நாடாளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்படவுள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடக இணைப்பாளர்  கலாநிதி எஸ்.ரகுராம் தெரிவித்தார்.

செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்ட வரைவு தொடர்பான கலந்துரையாடல், மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபோதே, அவர் இதனைக் கூறினார்.

செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவை மற்றும் ஊடக மறுசீரமைப்புக்கான செயலகமும் இணைந்து மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்காக இக்கலந்துரையாடலை நடத்தியது.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது போன்று, செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

'இந்நிலையில் பொதுமக்கள்,  ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியில் இந்தச் சட்டவரைவு முன்வைக்கப்பட்டு, ஆலோசனை மற்றும்; முன்மொழிவுகள் பெறப்பட்டு வரப்படுகின்றன' என்றார்.  

'எமது நாட்டில் பத்திரிகை பேரவைச் சட்டம் இருக்கின்ற போதிலும், ஊடக நிறுவனங்களின் கடமைகளைக் கட்டுப்படுத்தும் சில சட்டங்கள் இருக்கின்றன. அவ்வாறிருக்காமல், ஊடகங்கள் சுயாதீனமாகச் செயற்படும் வகையில் இந்த செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்டவரைவு உருவாக்கப்பட்டுள்ளது.

செய்தி ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் மற்றும் இலங்கையின் செய்தி ஊடகங்களின் உயர் தொழில்சார் நியமங்களை பேணி முன்னேற்றும் குறிக்கோளுடன் செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்டத்தை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

'இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் பேசும் மக்களின் குரல்களும்; ஒலிக்க வேண்டும். அவர்களின் கருத்துகளும் இதில் உள்வாங்கப்பட வேண்டும்'; என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .