2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சாராயத்துடன் பெண் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 20 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 40 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர் மட்டக்களப்பு, ஏறாவூர் 04ஆம் குறிச்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை (19) மாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

அத்துடன், இச்சந்தேக நபரிடமிருந்து 750 மில்லிலீற்றர் சாராயமும் பொலிஸாரால்  கைப்பற்றப்பட்டது.  

குறித்த பகுதியில், மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவுப்  பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.ஏ.வஹாப் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே இவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .