2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் வாக்களிப்பு

Editorial   / 2019 நவம்பர் 16 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைள் இடம்பெற்றுவரும் நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான எம்.எல்.என்.எம்.ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி மில்லத் மகளிர் கல்லூரியில் இன்று (16) காலை தனது வாக்கைப் பதிவுசெய்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் மொத்தமாக 3 இலட்சத்து 98 ஆயிரத்து 301 பேர் (398,301) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதில், கல்குடா தேர்தல் தொகுதியில் 115,974 பேரும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 187,672 பேரும், பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் 94,648 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .