2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தீக்காயங்களுக்குள்ளான பெண் சிகிச்சை பலனின்றி மரணம்

Kogilavani   / 2017 மே 19 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு, ஏறாவூர் - மிச்நகரிலுள்ள வீடொன்றில் இருந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (14) தீக்காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண், நேற்று  வியாழக்கிழமை  பகல், சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏறாவூர் மிச்நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த 3  பிள்ளைகளின் தாயான சர்மீலா நஸீர் (வயது 40)  என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X