2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போஷனைமட்டத்தை அடையாத 18,000 குடும்பங்கள்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 22 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 18,000 குடும்பங்கள் ஏறக்குறைய 10 சதவீதமான குடும்பங்கள் போஷனைமட்டத்தை அடையாதவர்களாகக் காணப்படுகிறார்கள். அவர்களை அந்த நிலையிலிருந்து உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களின் போஷாக்குத் தரத்தை உயர்த்துவது தொடர்பான கருத்தரங்கு உடற்பயிற்சி  மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டபோதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ள பல்துறைசார் போஷனை தொடர்பான செயற்றிட்டத்தின் முக்கியமான நோக்கம், இலங்கையிலுள்ள போஷனை குறைவான, மன, உடல் வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளுதல் என்ற சவாலாகும்.

உலகின் அனைத்து நாடுகளிலும் மிகக்கவனமாக செயற்படுத்தப்படுகின்ற செயற்றிட்டமாக இது காணப்படுகிறது. குழந்தையொன்று பிறந்தது முதல் அதனுடைய உடல் நலம் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளையும் தேவைகளையும் மிகக் கவனமாக முன்னெடுக்கின்ற செயற்பாடு இருக்கின்றது. அந்த வகையில், இலங்கையைப் பொறுத்தவரையில் இலவசக் கல்வியையும் இலவச மருத்துவத்தினையும் வழங்கி மற்றவர்களுடைய நிலைக்கு உயர்த்தும் வகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. இருந்தாலும், தொடர்ச்சியாக நடைபெற்ற யுத்தம், பல்வேறு இயற்கை அழிவுகள் காரணமாக ஒரு குறிப்பிட்ட தொகை மக்கள் இந்தப் போஷனை அடைவு மட்டத்தினை அடைய முடியாத நிலையில் உள்ளனர். அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 18000 குடும்பங்கள் கிட்டத்தட்ட 10 சதவீதமான குடும்பங்கள் போஷனை மட்டத்தினை அடையாதவர்களாகக் காணப்படுகிறார்கள். எனவே தான் சுகாதாரத்திணைக்களத்தினால் மாத்திரம் செயற்படுத்த முடியாத நிலையில், பல்வேறு திணைக்களங்களும் இதில் செயற்பட்டால் தான் இந்த மட்டத்தினை அடைய முடியும் என்ற வகையில் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

முதலாவதாக அதிக மதுபாவனை , இரண்டாவதாக பாடசாலைகளிலிருந்து பிள்ளைகள் இடைவிலகுவது, இளவயது திருமணம், வீட்டு வன்முறைகள், போதைவஸ்து பாவனை, அது மட்டுமல்ல முறையற்ற ஆவணங்களைச் சமர்ப்பித்து வெளிநாடுகளுக்குச் செல்வது, அவர்கள் அங்கு பாதிக்கப்பட்டு திரும்புவது உள்ளிட்ட பல்வேறு சமூகப்பிரச்சினைகளுக்கு இந்தச் சமூகம் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இது வழமையாக யுத்தத்திலிருந்து விடுபட்டு வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்ற சமூகத்திலே நடைபெறுகின்ற விடயங்கள் தான். இவ்வாறான பல்வேறுபட்ட சமூகப் பிரச்சினைகளோடுதான் இந்தச் சமூகத்தோடு செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

எனவே, இவ்வாறான பிரச்சினைகள் பாடசாலை மட்டங்களில் அறிந்த, தெரிந்த விடயங்களாக இருக்கின்றன. வெறுமனே போஷாக்கினை மட்டும் பேசுவதனால் அதனை உயர்த்த முடியாது.  பாடசாலை மட்டங்களில் ஏற்படுத்தப்படுகின்ற அறிவூட்டல் பிள்ளைகளின் ஊடாக பெற்றாரிடம் பேறுகின்ற நடைமுறைகள் எதிர்காலத்தில் நம்முடைய மாவட்டத்தின் போசாக்கு முட்டத்தின் மேம்பாட்டுக்கு காரணமாக அமையும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X