2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் கறுவா அறுவடை

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. விஜயரெத்தினம்

நீர்த்தட்டுப்பாடு, யானைப் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை ஒரு போராட்டமாக எடுத்துக் கொண்டு, ஏற்றுமதிக் கிராமங்களை உருவாக்க வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தெரிவித்தார்.

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கறுவா அறுவடை விழா,  மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் தலைமையில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் தாந்தாமலை – ரெட்பானா கிராமத்தில் நேற்று (16) நடைபெற்றது.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய மாவட்ட மேலதிக செயலாளர், “கனவாக இருந்த ஒரு ஏற்றுமதிப் பயிரை எமது மாவட்டத்தில் பயிரிட்டு அறுவடை செய்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். கிராமத்தினுடைய விவசாயிகளாகிய மக்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்லர். நாங்கள் அறிவுரைகள் வழங்குகின்ற பட்சத்தில், அதற்குச்செயல் வடிவம் கொடுக்கின்றவர்கள். ஆகவே, இவ்வாறான ஒரு நிகழ்வு நிறைவேறியிருப்பது பெருமிதமான விடயம்” என்றார்.

“நெல்லைத் தவிர்த்து, ஏற்றுமதிப் பயிர்களும், உப உணவுப் பயிர்கள், பாரம்பரியமான மரக்கறி வகைகளுக்கு சர்வதேச ரீதியான கிராக்கி உள்ளது. குறிப்பாக, புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது மக்களே ஏற்றுமதிக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“சாதாரணமாகக் குறிப்பிட்டால் எமது பிரதேசத்தில் முருங்கை இலை, கருவேப்பிலை என அனைத்துப் பொருள்களையும் ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு நிலை இருக்கிறது. அந்த வகையில், நிறையவும் சந்தை வாப்புகள் இருக்கின்றன.

“ஆகவே, விவசாயிகளாகிய நாங்கள் இந்தப் பிரதேசத்தின் வளத்தின் உச்ச பயனைப் பெற்றக்கொள்ளும் முகமாக நீர்த்தட்டுப்பாடு, யானைப் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை ஒரு போராட்டமாக எடுத்துக் கொண்டு, ஏற்றுமதிக் கிராமமாக மாற்ற வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஸ், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.பி.இக்பால், மாத்தளை ஏற்றுமதி விவசாயத் திணைக்கள விரிவாக்கல் உத்தியோகத்தர் எம்.ஏ.எம். இல்மி மற்றும் எம்.ஏக்கநாயக்க, மட்டக்களப்பு ஏற்றுமதி விவசாயத் திணைக்கள விரிவாக்கல் உத்தியோகத்தர் நர்த்தனா குகதாசன், மற்றும் உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலரும்கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வினை அடுத்து, கறுவா உற்பத்தி மற்றும் முக்கியத்துகவம் குறித்து மாத்தளை ஏற்றமதி விவசாயத் திணைக்கள விரிவாக்கல் உத்தியோகத்தர் எம்.ஏ.எம். இல்மி விளக்கவுரை வழங்கினார்.

அதனையடுத்து, அதிதிகளுக்கு நினைவுப் பரிசில்களும், கறுவாக்கன்றுகளும் வழங்கப்பட்டு, கறுவா அறுவடை நிடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X