2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் டெங்கு நோய் அதிகரிப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 நவம்பர் 22 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட 20 வட்டாரங்களிலும் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை டெங்கு காய்ச்சல் காரணமாக, 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன் தெரிவித்தார்.

இவற்றைக் கட்டப்படுத்த மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதாரக் குழுவினரும் விசேட டெங்கு ஒழிப்புப் பிரிவினரும், மட்டக்களப்பு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றத.

இதற்காக, நுளம்புகள் பரவும் இடங்களில் டெங்கு ஒழிப்பு புகை விசுறுதல், நீர் நிலைகளின் நுளம்பின் குடம்பிகளை உண்ணும் மீன்களை இடல், தொற்று அதிகமாகக் காணப்படும் வட்டாரங்களில் வடிகான்களை துப்பரவு செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .