2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவப்பகிர்வுகள் கதையல்ல. அவை பாதிப்பின் பிரதிபலிப்பு'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிருப்தியுடனும் ஆதங்கத்துடனும் காலங்கழிக்கின்றார்கள். யுத்தப் பாதிப்புக்களுக்குள்ளான மக்கள் கூறும் கண்ணீருடனான அனுபவப்பகிர்வுகள் வெறும் கதையல்ல. அவை பாதிப்பின் பிரதிபலிப்பு என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (11)  கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, 'யுத்த காலத்தில் மக்கள் பல்வேறு வகையான மனித உரிமை மீறல்களைச் சந்தித்திருக்கின்றார்கள். அவர்கள் வௌ;வேறு கோணங்களில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் யுத்தத்தில் சம்பந்தமில்லாத பொதுமக்களும் கூடப் பல்வேறு பாதிப்;புகளை  எதிர்கொண்டிருந்தார்கள்.
அரச பாதுகாப்புத் தரப்பினர், ஆயுதம் ஏந்திய குழுக்கள், தனிப்பட்ட வன்முறைக் கும்பல்கள் ஆகிய தரப்பினரிடமிருந்து மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.
பாதிப்புகள் இடம்பெற்று அதிக காலம் கடந்தபோதிலும், பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்ற இழப்பீடு மற்றும் அரசாங்கத்தாலும் சமூகத்தாலும் வழங்கப்படக்கூடிய ஆதரவு, பாதுகாப்பு என்பன இன்னமும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியும் ஆதங்கமும் மக்களிடம் காணப்படுகின்றன' என்றார்.
'மேலும், இந்த நாட்டில் நிலவிய வன்முறை சார்ந்த ஆயுதக் கலாசாரம் முடிவுக்கு வந்த பின்னர், நாட்டில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் பற்றிக் கதைக்கும் நல்ல சூழல் ஏற்பட்டிருக்கின்றது என்பதை எல்லோரும் உணர்கின்றோம்.
இந்தச் சூழலில் ஆகக்கூடுதலாக கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் வகையில்  கலந்துரையாடல்கள், விழிப்புணர்வுச் செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் பல்வேறு கருத்துகள், அனுபவப்பகிர்வுகள் மக்களிடமிருந்து கிடைக்கின்றன.
மக்களின் அனுபவங்களின் ஊடாகப் பெறப்பட்ட கருத்துகளை மையமாக வைத்து பல்வேறு விதப்புரைகள் அதிகார மட்டத்திடம் கையளிக்கப்பட்டபோதும், அதற்கான அமுலாக்கங்கள் இன்னமும் இடம்பெறவில்லை என்பதே இப்பொழுது மக்கள் மத்தியில் எழுந்துள்ள ஆதங்கமாகவும் குறைபாடாகவும் உள்ளன' எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .