2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யானைகளின் தாக்குதல்கள் காரணமாக 3 வீடுகள் சேதம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 27 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வவுணதீவு மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை யானைகளின் அட்டகாசம் காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.

வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  பன்சேனைக் கிராமத்தில்; ஒரு வீடும் நல்லதண்ணிஓடைக் கிராமத்தில்; ஒரு வீடும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, விளாவடிவட்டைக் கிராமத்தில் ஒரு வீடும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நல்லதண்ணிஓடைக் கிராமத்திலுள்ள வீடொன்றை உடைத்த யானை,  அங்கு சிறுபோகச் செய்கைக்காக வைக்கப்பட்டிருந்த விதைநெல்லை உட்கொண்டுள்ளது. அத்துடன், பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .