2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வரட்சியால் 15,000 குடும்பங்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

தற்போது நிலவும் வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 15,000 குடும்பங்கள் குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் கே.இன்பராஜன் தெரிவித்தார்.

இந்தக் குடும்பங்களுக்கான குடிநீர்த் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அந்தந்த பிரதேச சபைகளின் உதவியுடன் நீர்த்தாங்கி பவுசர்களில் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது.

வவுணதீவு, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை ஆகிய பிரதேசங்களிலேயே அதிகமான குடும்பங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X