2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

எஸ். பாக்கியநாதன்   / 2017 மே 26 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லதம்பி நித்தியானந்தன் 

சுவாமி விபுலானந்தரின் 125 ஆவது ஜனன ஆண்டு விழாக் கொண்டாட்ட விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு நகரில் இன்று (26) நடைபெற்றது.

ஊர்திகள் சகிதம் பட்டிருப்பு மற்றும் சித்தாண்டிலிலிருந்து ஆரம்பமான ஊர்வலம் பிரதான வீதி வளியாக சுவாமியின் சமாதி அமைந்துள்ள கல்லடி உப்போடையைச் சென்றடைந்தது.

சுவாமி விபுலானந்தரின் நூற்றாண்டு விழாச்சபை ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு ஊர்வலத்தின்போது, இந்துசயக்குருமார், பக்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாரம்பரிய முறைப்படி தோரணம் கட்டியும், நிறைகுடம் வைத்தும் ஊர்வலத்தை வரவேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .