2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Niroshini   / 2016 ஜூலை 30 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை ( 29) மாலை 5 மணியளவில், காரும் மோட்டார் சைக்கிளும்  மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயங்களுக்குள்ளானதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் மோட்டார் சைக்கிளைச்  செலுத்திச் சென்ற காத்தான்குடி 3 ஆம் குறிச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மத் கலீல் (வயது - 58) என்பவரே படுகாயங்களுக்குள்ளான நிலையில்  காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மழை பெய்து கொண்டிருந்தபோது பிரதான வீதியால் வந்த கொண்டிருந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X