2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நித்தி ஆனந்தன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் செட்டிபாளையம் முருகன் ஆலயத்துக்கு அருகில் கோழி ஏற்றிச்செல்லும் லொறியொன்று வீட்டின் மீது மோதி, இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கல்முனையில் கோழிகளை இறக்கிவிட்ட ஏறாவூர் நோக்கிச் சென்ற லொறியே விபத்துக்குள்ளானதாகவும் அதன் உதவியாளர் ஏறாவூரை சேர்ந்த முகமட் ஷஜான் (27 வயது) என்பவர் படுகாயமடைந்துள்ளதாகவும் களுவாஞ்சிகுடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடிப் போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .