2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாழ்வின் எழுச்சித்திட்டப் பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 19 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சித்திட்டப் பயனாளிகளுக்கு வாழ்வதார உதவிகளை வழங்குவதற்காக இந்த வருடம் 84 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரட்ணம் தெரிவித்தார்.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழ்வின் எழுச்சித்திட்டப் பயனாளிகள் 170 பேருக்கு வாழ்வதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (18) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'மட்டக்களப்பு மாவட்டம் வறுமையான மாவட்டமென்பதால், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களின் வறுமையைப் போக்கி அவர்களின் வாழ்வதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக அவர்களுக்கு வாழ்வாதாரத் தொழில் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், கடந்த வருடம் 55 மில்லியன் ரூபாய் பெறுமதியில் வாழ்வாதார உதவிக்கான உபகரணங்கள் மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சித்திட்டப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. அவ்வாறே, இந்த வருடமும் 84 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் வாழ்வாதார தொழில் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன' என்றார்.  

'80  சதவீதமான பயனாளிகளுக்கு 90 சதவீத மானிய அடிப்படையிலும் 20 சதவீதமான பயனாளிகளுக்கு  40 சதவீத மானிய அடிப்படையிலும் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்துக்காக கைம்பெண்கள், அங்கவீனர்கள், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களில் பயனாளிகள் தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த தொழில் உபகரணங்களை பெறும் பயனாளிகள் உரிய நோக்கத்துக்கு பயன்படுத்த வேண்டும். இதை வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மதிப்பீடு செய்வார்கள்' எனவும் அவர் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .