2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விவசாய உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 

கரடியனாறு, மாவளையாறுப்  பிரதேசத்தைச் சேர்ந்த 46 விவசாயிகளுக்கு  விவசாய உபரணங்கள் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (12) வழங்கப்பட்டன.
 
மாவளையாறு கைலன் வித்தியாலய வளாகத்தில் வைத்து 35 பேருக்கு பிளாஸ்டிக் கூடைகளும் 10 பேருக்கு நீரிறைக்கும் குழாய்களும் ஒருவருக்கு நீரிறைக்கும் இயந்திரமும் வழங்கப்பட்டன.  
 
சுமார் 5 இலட்சம் ரூபாய் செலவில் விவசாயிகளின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட நெற்தானியங்களை உலரவைக்கும் தளமும் இதன்போது திறந்துவைக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .