2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அரியவகை ஆமைகளைக் கடத்திய இளைஞர்கள் இருவர் கைது

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜௌபர்கான்)

அரியவகை பால்ஆமைகளைக் கடத்திய இரு இளைஞர்களை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 23 அரியவகை பால்ஆமைகள் கைப்பற்றப்பட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட முச்சக்கரவண்டியும் பறிமுதல் செய்யப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை போரதீவு பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த முச்சக்கரவண்டியை செட்டிபாளையத்தில் வைத்து சோதனையிட்டபோதே இக்கடத்தல் நடவடிக்கை தனக்கு பிடிபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .