2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட இருவர் மட்டக்களப்பில் கைது

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜௌபர்கான்)

சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட இருவரை மட்டக்களப்பு மாவட்ட வன இலாகா அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஒருவருக்கு தலா 60 ஆயிரம் ரூபா வீதம் அபராதம் விதிக்க நீதிவான் வீ.இராமகமலன் உத்தரவிட்டார்.

கடந்த புதன்கிழமை மாலை மகாஓயாவிலிருந்து குறித்த மரங்களை ஏற்றிக்கொண்டு கரடியனாறு பகுதியால் வந்து கொண்டிருந்தபோது வனஅதிகாரிகள் இவர்களைக் கைது செய்துள்ளதாக மாவட்ட வன இலாகா தெரிவித்துள்ளது.

இவர்களால் கொண்டு வரப்பட்ட 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரங்கள் நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .